நீங்காத நிலவரைகள் (Landmarks) - சூலை 2009 ஒளிப்படப்போட்டிக்கு

 
அன்புடன் திகழ்மிளிர் at 12:33 AM, | 5 comments

பரிசல்காருக்கு பிடித்தது



50- ஆவது இடுகை என் அன்பு நண்பருக்கு

------------------------
நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்....

-----------------------------------

வானத்தில்
நிறைய நட்சத்திரங்கள்
பூமி எதிர்பார்ப்பது
மழை !

------------------------------------

தூரத்திலிருந்து
பார்க்கும்போது
அழகாகத்தான்
இருக்கிறது
ஊர்!

-------------------------------

ஓவ்வொருவர்
கையிலும்
தராசு
தன்னை
எடைபோட
அல்ல!

----------------------------

பெரிய
வித்தியாசமொன்றுமில்லை
அடிப்படையில்
தீப்பெட்டிப்படம்
சேகரித்துக்கொண்டிருக்கிறான்
என் மகன்
கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான் !

----------------------------------

அத்தனையும் விக்ரமாதித்யன் கவிதைகள்
----------------------------------

குறிப்பு:

/

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலுமே நனையப் பிடிக்கும்.

(இந்தக் கேள்விக்கு குளிக்க’ என்கிற பதம் தவறென்று நினைக்கிறேன். இவற்றில் குளிப்பதைவிட நனைதலைத்தான்தான் மிக விரும்புவார்கள்... இல்லையா? அருவி ஒருபடி மேல். (அருவி என்றது விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது... எங்கே யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்!)/

--------------------------

/@ திகழ்மிளிர்
நன்றி! (விக்ரமாதித்யனின் அந்தக் கவிதை என்னான்னு சொல்லவேல்ல? உங்களுக்குத்தான் கவிதைகள் மிகப்பிடிக்குமே?)/


Labels:

 
அன்புடன் திகழ்மிளிர் at 8:44 AM, | 5 comments

படமும் பாதிப்பும் - 01/06/2009

நிழல் தேடும் சூரியன்





ஆதவனுக்கு முன்பே
அதிகாலையில்
கண் விழிப்பாய் - ‍‍உந்தன்
க‌ண்மணிக‌ளுக்காக‌...

அடுப்பு அடியில் ஆரம்பித்து
உடுப்பு அணிவித்து அனுப்பும்வரை - உந்தன்
இடுப்பு உடையும்.

இத்தனையும் முடிந்த பின்
இன்னமும் இருந்துக் கொண்டு இருக்கும்
பணிகள் பல...

துணி துவைப்பதிலும்
வீட்டை துடைப்பதிற்குள்
வந்துவிடும் மதியம்
வயிறும் - உந்தன்
நினைவிற்கு வரும்.

உண்ட உடன் ‍- உந்தன்
உள்ளம் உறங்குமா ?
உதிக்குமே - உந்தன்
மூளையில் வேலைகள் பல...

காய வைப்பதிலும்
புடைப்பதிலும் - உந்தன்
பொழுது போய்
பொழுது வந்துவிடும்.

ஆயத்தம் ஆகுவாய் - உந்தன்
அடுக்களைப் பணிக்கு
அப்பனும் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டிக்குள்
தொலைந்துப் போய்
வட்டிலுக்கு வந்து
கட்டிலுக்கு போவார்கள்.

இத்தனையும் முடிந்த பின்
கடமை முடித்து கண்ணயரும்
கதிரவனாய் - உந்தன்
இமை மூடி இளைப்பாறுவாய்
அன்னையே...
நாளைய கடமையைப் பற்றிய
நினைவோடு
நித்தரையில்...

Labels: , , ,

 
அன்புடன் திகழ்மிளிர் at 1:57 AM, | 4 comments

படமும் பாதிப்பும் - 27/05/2009


படம் பார்த்து கவிதை




(Thanks - SanjaiGandhi )

கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
ணவன்
தாரம்
ற்றும்
சங்கள் சேர்ந்தயுடன்.

.....................................................................................................

உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................


Labels: , , , , ,

 
அன்புடன் திகழ்மிளிர் at 12:19 AM, | 3 comments